அருண்ஜெட்லி வீட்டிற்கு செல்லும் மோடி!

அருண்ஜெட்லி வீட்டிற்கு செல்லும் மோடி!

புதுடெல்லி:

உடல்நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் இடம் வேண்டாம் என கடிதம் எழுதிய பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லியை சமாதனப்படுத்த பிரதமர் மோடி அவரது வீட்டிற்கு செல்கிறார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லி ஓய்வில் இருந்து வருகிறார். பா.ஜ., வெற்றியை தொடர்ந்து மோடி தலைமையிலான அரசு வரும் 30ம் தேதி பதவியேற்கிறது.

புதிதாக பதவியேற்க இருக்கும் மத்திய அமைச்சர் பட்டியலில், அருண்ஜெட்லி பங்கேற்பாரா என சந்தேகத்திற்கிடமான நிலையில், தற்போது, பிரதமர் மோடிக்கு பா.ஜ.,வின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்த கடிதத்தில், உடல்நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனவும், தான் ஒய்வெடுக்க விரும்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிதியமைச்சரும், பாஜ., மூத்ததலைவருமான அருண்ஜெட்லியின் வீட்டிற்கு நேரடியாக சென்று சமாதனப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 8.30 மணிக்கு பிரதமர் மோடி, அருண்ஜெட்லிவீட்டிற்கு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்