புதுடெல்லி:
ஐசிசி உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றது. இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல் கூறியுள்ளார்.
அதில், ஏமாற்றமளிக்கும் முடிவு என்றாலும் கூட இந்திய அணியின் போராட்ட குணத்தை காண முடிந்தது; பேட்டிங், பவுலிங், பீல்டிங் என தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம்;அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகள் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.