‘‘சறுக்கல்தான்; தோல்வியல்ல’’

‘‘சறுக்கல்தான்; தோல்வியல்ல’’

பெங்களூரு:

‘சந்திரயான் 2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிக்னல் கடைசி நேரத்தில் துண்டிக்கப்பட்டது சறுக்கல் தான் தோல்வியல்ல என பிரதமர் மோடி விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தினார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் கூறுகையில், நாட்டை தலை நிமிரச் செய்ய விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையுடன் பணியாற்றினீர்கள். கடைசி நிமிடத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டது அது தோல்வி அல்ல.

உங்கள் உழைப்பு நாட்டை தலைநிமிர வைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியா தலை நிமிர இஸ்ரோவின் பங்கு முக்கியமானது. சிறு சிறு சறுக்கல் நம் இலக்கை அடைய தடையாக இருக்காது. உங்களுடன் நான் இருக்கிறேன். மிக நெருக்கமாக வந்து தவறவிட்டு விட்டோம் அடுத்தமுறை வெற்றி நமக்கே. சாதிப்பதற்கு நமக்கான வாய்ப்புகள் இன்னும் நிறைய இருக்கிறது, அடுத்த முறை மிக சிறப்பான பங்களிப்பை அளிப்போம்.

சிறப்பான திட்டங்கள், கடுமையான உழைப்பு இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளது. சாதிப்பதற்கு நமக்கான வாய்ப்புகள் இன்னும் நிறைய இருக்கிறது. நாட்டுக்கான உங்களது பங்களிப்பை வார்த்தையால் விவரிக்க முடியாது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் நாம் பயணிப்போம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்