‘‘வெற்றிக்குப்பிறகு விரைவில் வாக்குறுதி நிறைவேற்றவோம்’’ – பிரதமர் மோடி

‘‘வெற்றிக்குப்பிறகு விரைவில் வாக்குறுதி நிறைவேற்றவோம்’’ – பிரதமர் மோடி

புதுடெல்லி:

இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், பண்டிகை, கிரிக்கெட் போல் தேர்தலும் திருவிழா போல் நடக்கிறது. ஜனநாயகத்தை நாம் எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம். தேர்தலை வெற்றிகரமா நடத்த உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, 2வது முறையாக எங்களது அரசு முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும். மக்களின் ஏகோபித்த ஆதரவு கொடுத்துவருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்