தாய் நாட்டை மறக்காதீர்கள்

  • In Chennai
  • September 30, 2019
  • 222 Views
தாய் நாட்டை மறக்காதீர்கள்

சென்னை:
எந்த நாட்டில் வேலை செய்தாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள் என்று பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.

சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதன் பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசினார். உலகின் டாப் 3 நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் சென்னை ஐஐடி சிறப்பான இடத்தை பிடிக்கிறது.

முயற்சி, திறமை, அர்பணிப்பு உணர்வு உள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மேலும், எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்