தனது அறையில் காந்தி, வல்லபாய் பட்டேலுக்கு பூஜை செய்த மோடி..!

தனது அறையில் காந்தி, வல்லபாய் பட்டேலுக்கு பூஜை செய்த மோடி..!

புதுடெல்லி:

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மொத்தம் 58 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய துறைகளின் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். பிரதமர் மோடியும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தனது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்போது தனது அறையில் வைக்கப்பட்டிருந்த, மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பூஜை செய்து பணியை தொடங்கினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்