கொல்கத்தா:
மேற்குவங்கம் சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
இரண்டு நாட்கள் பயணமாக மேற்குவங்க மாநிலத்துக்கு சென்றுள்ள மோடி கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் அங்குள்ள ராஜ்பவனில் தங்கியுள்ள அவரை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெறுவது குறித்து விவாதித்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.