சென்னை:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
வரும் 30ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசனுக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என அறவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பேசியதால் பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்டோரின் கண்டனங்களுக்கு உள்ளான நிலையில், தற்போது மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பால், ‘எதிரியும் நண்பன்தான்’ என பா.ஜ.,வினர் நிரூபித்துள்ளனர். ஒருவேளை ரஜினியின் நண்பர் என்பதால் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்க ரஜினி தரப்பில் கோரப்பட்டதாக இருக்ககூடுமோ என தெரிகிறது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல் இன்னும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.