புதுடெல்லி:
பா.ஜ., எம்பிக்கள் பயிற்சி முகாமில் கூட்டத்தில் ஒருவராக பிரதமர் மோடி அமர்ந்திருந்தார்.
புதுடெல்லியில் பா.ஜ., எம்பிக்களின் 2 நாட்கள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி பிரதமர் மோடி துவக்கிவைத்தார். இதில் பா.ஜ., எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்றை கூட்டத்தில் மோடி மேடையில் அல்லது முன் வரிசையில் அமராமல் எம்பிக்களோடு கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்தார்.