சூரத்:
குஜராத் மாநிலம், சூரத்தில் மோடியின் முகத்துடன் ஐஸ் கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.
மக்களவைத்தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்று, வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், அதனை கொண்டாடும் வகையில் இந்த ஐஸ்கிரீம் செய்யப்ட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, ஐஸ் கிரீம் கடையின் உரிமையாளர் விவேக் அஜ்மேரா கூறுகையில், பா.ஜ., வின் வெற்றியை கொண்டாட ‘மோடி சித்தபால் குல்பி’ என்ற ஐஸ் கிரீமை செய்து விற்பனை செய்துவருகிறோம். இது முழுக்க முழுக்க கைகளால் செய்யப்பட்டது. இதில் ரசாயணப்பொருட்கள் இல்லை. முற்றிலும் இயற்கையானது.
இந்த கேக் 50 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்து வருகிறோம். மோடி பதவியேற்கவுள்ள வரும் 30ம் தேதி வரை மட்டுமே இந்த ஐஸ் கிரீம் விற்பனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.