புதுடெல்லி:
அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகள் குறித்தும், 7 முக்கிய கோப்புகளிலும் கையெழுத்தாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.