புதுடில்லி:
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ. குல்தீப் சென்கர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாரியை ஏற்றி கொல்ல சதி செய்ததாக பா.ஜ. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ., எம்எல்ஏ குல்தீப் சென்கர் கட்சியிலிருந்து பா.ஜ., நீக்காமல் ஏன் மவுனம் காத்துவருகிறது என பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், தற்போது உன்னாவ் தொகுதியின் பா.ஜ., எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கி பா.ஜ., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.