சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்கள் தொடர்பு! பொன்மானிக்கவேல் அதிரடி!!

சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்கள் தொடர்பு! பொன்மானிக்கவேல் அதிரடி!!

சென்னை:

சிலை கடத்தல் வழக்குகளில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வந்தது. சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன்.மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்