சென்னை:
சொத்து வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதால், பழைய வரியே செலுத்தலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.