மாணவர்கள் கயிறு கட்டலாம்.. செங்கோட்டையன்

மாணவர்கள் கயிறு கட்டலாம்.. செங்கோட்டையன்

சென்னை:
சென்னையில் சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடுத்த ஆண்டு முதல் சாரண-சாரணியர் இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டும் விவகாரத்தில், பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், பகுதிநேர ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.

ஆசிரியர் தகுதி தேர்வு (‘டெட்’) முடிவுகள் இன்னும் 20 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்