அரசு பள்ளிகளில் யோகா

அரசு பள்ளிகளில் யோகா

மும்பை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கலைகள் கற்றுத்தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் உள்ள யோகா கலை பயிற்றுவிக்கும் கைவல்யதாமா நிறுவனத்தை பார்வையிட்டார்.

அரசுப்பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டார்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்