கைவிடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு

கைவிடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு

மதுரை:

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.

பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் முன், முகாந்திரம் இல்லாததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வருமானம், சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குர் மற்றும் பொதுப்பணித்துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில், விசாரணை அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காரணம் தெரிவிக்கப்படவில்லை என நீதிபதிகள் விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என வரும் 26ம் தேதிக்க வழக்கை ஒத்திவைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்