‘‘சமூகவலைதள பதிவை அரசியல் ஆனது’’ – அமைச்சர் ஜெயகுமார்

‘‘சமூகவலைதள பதிவை அரசியல் ஆனது’’ – அமைச்சர் ஜெயகுமார்

சென்னை:

முதல்வரின் சமூகவலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இது தான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனவும், மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை என தெரிவித்தார்.

மேலும், முதல்வரின் சமூகவலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவு போடப்பட்டது. தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்றாரர்.

நீட் தேர்வு குறித்து கேட்டபோது, மாணவிகள் தற்கொலை வேதனை அளிக்கிறது எனவும், தற்கொலை என்பது தீர்வல்ல எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்