சென்னை:
சென்னையில் விளம்பரத்துக்காக சில இடங்கில் அரசியல் கட்சியினர் குடிநீர் விநியோகித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் தூங்காமல் கூட லாரிகளில் வரும் குடிநீரை பிடித்து வைக்கின்றனர். இந்த குடிநீர் பிரச்சனையை பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் தினமும் 9 ஆயிரம் முறை லாரிகள் மூலம் தமிழக அரசு குடிநீர் விநியோகித்து வருகிறது.
விளம்பரத்துக்காக சில இடங்கில் அரசியல் கட்சியினர் மக்களுக்கு குடிநீர் விநியோகித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.