இலங்கை ராணுவத்திற்கு பால் வழங்கமாட்டோம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

இலங்கை ராணுவத்திற்கு பால் வழங்கமாட்டோம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டதால், அவர்களிடம் பால் ஊற்றிய உற்பத்தியாளர்கள் எங்களிடம் பாலை கொடுத்து வருகின்றனர். அதனால் 48 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். தரமான பாலை மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்யும். தரமில்லாத பாலை ஆவின் நிர்வாகத்திடம் கொடுத்து பணம் வாங்க நினைத்தால் அது ஒரு காலமும் நடக்காது. இலங்கை ராணுவத்திற்கு பால் வேண்டும் என்று கேட்டனர். ஆனால், ராணுவத்திற்கு கொடுக்க மாட்டோம். யாழ்ப்பாணம் மக்களுக்கு தருகிறோம் என்று கூறி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்