ஒசூர்:
ஒசூர் பகுதிகளில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
மறைந்த தமிழக முதல்வர் எம் ஜி. இராமச்சந்திரன் பொன்மனை செம்மல், புரட்சி தலைவர் என அழைக்கப்பட்டவர், தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இன்றுவரை இருந்து வரும் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாளான இன்று தமிழகம் மட்டுமல்லாது அவரது ரசிர்களால் உலகம் முழுவதும் நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அவற்றின் ஒருபகுதியாக ஒசூர் பகுதிகளில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவினர் சார்பில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது பாகலூரில் நடைப்பெற்ற பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பங்கேற்று ஏழை எளியோருக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கினார்.
மேலும் ஒசூர் மாநகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், எம்ஜிஆர் மார்க்கெட்டில் புரட்சி தலைவரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.