தர்மபுரியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்.!

தர்மபுரியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்.!

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 103வது பிறந்த நாளையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் யசோதா மதிவாணன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போன்று ஊரக பகுதியான பாலவாடி பஞ்சாயத்தில் நல்லம்பள்ளி ஒன்றிய துணை செயலாளர் வேடி எம்.ஜி.ஆர்., திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மூன்று ரோடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அப்புசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்