மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சேலம்:

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி உள்ளிட்ட அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், கர்நாடக அணைகளிலிருந்து 25 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒகேனேகல் காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8,347 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 34,722 கனஅடியா நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் நேற்று 113.03 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று பிற்பகலில் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்