மேட்டூர்:
கர்நாடக, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக இரு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணையின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதன் மூலம் 65வது முறையாக 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அணையை டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்கிறார்.