சென்னை:
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மட்டும் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாக அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கே தொடங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டணம், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டணச் சலுகையை அறிவித்துள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.