சென்னை:
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய செல்போன் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் முறை வரும் ஜனவரி முதல் அமலாகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்று ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவீதம் கட்டண சலுகையை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய முறையை விரைவில் அமல்படுத்த உள்ளது. இதனால்,, பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பது தவிர்க்கப்படுகிறது.
இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக புதிய செல்போன் செயலியை வருகிற ஜனவரியில் வெளியிடுகிறது. அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் பணத்தை ‘ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், கியூஆர் கோடு முறையும் அமல்படுத்தப்படவுள்ளது.