வேலூர்:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, தன்னை கருணை கொலை செய்யக்கோரி பிரதமருகக்கு மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான நளினி, விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் வேலூர் பெண்கள் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், விடுதலை வேண்டி பலமுறை போராடியும் கிடைக்காத விரக்தியில் இருப்பதாகவும், தன்னை கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.