மேல்மலையனூரில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூரில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை இரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசை என்பதால், உற்சவர் அம்மனுக்கு துர்கா பரமேஸ்வரி அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்