கோலத்திலிருந்து மெகந்திக்கு மாறிய போராட்டம்

கோலத்திலிருந்து மெகந்திக்கு மாறிய போராட்டம்

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் தற்போது கோலத்திலிருந்து மெகந்தி போராட்டமாக மாறியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் வீட்டு வாசலில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலமிட்டு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், கோலப்போராட்டத்தை அடுத்து, கைகளில் மெகந்தியிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி சார்பாக பெண்கள் தங்களின் கைகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வாசகங்களை மெகந்தி மூலம் எழுதிக்கொண்டார்கள்.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பபாளையம், மூலைக்கரைபட்டி, களக்காடு, ஏர்வாடி, துலுக்கர்பட்டி, வீரவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி சார்பாக மெகந்தி போராட்டம் நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்