நியூட்ரினோ திட்டம் குறித்து ஆலோசனை

நியூட்ரினோ திட்டம் குறித்து ஆலோசனை

சென்னை:

நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக, கேரள தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ளது. இந்த திட்டம் குறித்து, தமிழக மற்றும் கேரள தலைமைச் செயலாளர்களிடம் காணொலிக் காட்சி மூலம் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளை களைய தேவையான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, கேரள மாநில தலைமைச் செயலாளர், கேரள சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் நியுட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குனர் விவேக் தாதர் ஆகியோர் கலந்துகொண்டனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்