புதுடெல்லி:
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து டெல்லியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கும் வகையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை முன் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.