பணிச்சுமையால் மாணவி தறகொலை

பணிச்சுமையால் மாணவி தறகொலை

திருச்சி:
திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்புஜம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் கயல்விழி.

இவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகியுள்ளது. திருச்சியில் மாணவியர் விடுதியில் தங்கி கயல்விழி மேற்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கயல்விழி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் பணிச்சுமை அதிகமாக இருப்பதாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்