சென்னை:
நாளை நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க மீடியாக்களுக்கு அனுமதி கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எணணும் மையங்களில் ஊடகவியலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன் விபரம்:
- ஊடக மையத்திற்கு மட்டுமே கைப்பேசிகள் அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தினுள் கைப்பேசிகள் அனுமதி கிடையாது.
- தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- கைப்பேசி மூலம் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்தல் கூடாது. வீடியோ கேமரா மூலமே எடுக்க வேண்டும்.
- தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை கண்டிப்பாக ஊடகவியலாளர்கள் கைவசம் வைத்திருத்தல் வேண்டும்.
- வாக்கு எண்ணும் இயந்திரங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தல் கூடாது.
- வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுமதிக்கப்பட்ட எல்லைவரை மட்டுமே ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.