ஊடகங்களுக்கு முற்றுப்புள்ளி..! குமாரசாமி அதிரடி..!!

ஊடகங்களுக்கு முற்றுப்புள்ளி..! குமாரசாமி அதிரடி..!!

மைசூரு:

அரசியல் தலைவர்களை கேலி, கிண்டல் செய்து விமர்சிக்கும் ஊடகங்களுக்கு புற்றுப்புள்ளி வைக்க சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மைசூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, அரசியல்வாதிகள் வேலையில்லாதவர்கள் என்று ஊடகங்கள் நினைத்துக்கொண்டுள்ளதா எனவும், அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும் ஊடகங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தனது அரசு கவிழ்ந்துவிடும் என ஊடகங்கள் கூறிவருவதை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஊடகங்களின் தயவால் தான் ஆட்சியில் இல்லை. இத்தகைய ஊடகங்களின் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்