‘‘சால்வைக்கு ‘நோ’.. போட்டோவுக்கு ரூ.100’’ வைகோ அதிரடி

‘‘சால்வைக்கு ‘நோ’.. போட்டோவுக்கு ரூ.100’’ வைகோ அதிரடி

சென்னை:

எனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம் எனவும் போட்டோ எடுத்தால் ரூ.100 கட்சி நிதி வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு வைகோ விடுத்துள்ள செய்தியில், கட்சி தொண்டர்கள் இனி யாரும் எனக்கு சால்வை அணிவிக்கக்கூடாது எனவும், சால்வை அணிவிப்பதற்கு பதில் கட்சிக்கு நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூ.100 வழங்க வேண்டும். கட்சியில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாத நிர்வாகிகள் அனைவரும் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கட்டாயப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்