சென்னை:
சென்னையில் மாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக மதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ம் தேதி மதிமுக சார்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடைபெற்றது.
இதற்காக சைதாப்பேட்டை பகுதியில் மதிமுக கட்சியினர் கொடி கம்பம், மற்றும் பேனர்கள் வைத்திருந்தனர்.
அதனை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வரதராஜன் மற்றும் துப்புரவு ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரதராஜனை தாக்கியுள்ளனர்.
இது பற்றி வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மதிமுக தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர்.