சென்னை:
கடலூரில் அமையும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் விவசாயத்துக்கு பாதிப்பில்லை என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
அரசு துறைகள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட அரசு மின்னணு சந்தை மூலம் அதிகளவில் பயனடைவது தொடர்பான கருத்தரங்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர் ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் துறை செயலர்கள் கலந்து கெ £ண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.சம்பத், கடலூர் மாவட்டத்தில் அமையும் பெட்ரோகெமிக்கல் ஆலையால் அன்னிய முதலீடு அதிகரிப்பதோ டு, 5000 பேர் நேரடியாகவும், 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.