எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் வெளியீடு.! அமைச்சர் தகவல்.!

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் வெளியீடு.! அமைச்சர் தகவல்.!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

நெல்லை மருத்துவ கல்லூரியில் 150 மருத்துவ படிப்பு இடங்களை 250 ஆக அதிகரித்து இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

கரூர் புதிய மருத்து கல்லூரிக்கு 150லிருந்து 250 இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு வாய் மொழி உத்தரவு அளித்துள்ளது.

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்கள் உள்ளன. தற்போது 3 ஆயிரத்து 350 மருத்துவ இடங்கள் கிடைக்கும். முதுகலை மருத்துவ படிப்பிலும் 508 இடங்கள் அதிகரித்து இருக்கிறோம்.

இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வினியோகிக்கப்படும். மருத்துவ இடங்களுக்காக கலந்தாய்வு வழக்கமான முறையில் நடத்தப்படும் என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்