சச்சினுக்கு அவுட் சொன்னால் என்னால் திரும்ப போக முடியாது

  • In Sports
  • May 17, 2020
  • 158 Views
சச்சினுக்கு அவுட் சொன்னால் என்னால் திரும்ப போக முடியாது

ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்தது குறித்து பேசியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின்.

2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இந்த போட்டி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின், “ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தவர் சச்சின், அதுவும் குவாலியரில் எங்களுக்கு எதிரான போட்டியில் அடித்தார். எனக்கு நியாபகம் இருக்கிறது அந்தப் போட்டியில் சச்சின் 190 ரன்கள் அடித்த போது என்னுடைய பந்தில் எல்பி டபிள்யூ ஆனார்.ஆனால் நடுவர் அயன் கோல்ட் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஏன் அவுட் கொடுக்கவில்லை என்பது போல் நான் நடுவர் அயன் கோல்டை பார்த்தேன், அப்போது அவர் சுற்றிப்பார் நான் அவுட் கொடுத்தால் என்னால் திரும்பி ஹோட்டலுக்கு போக முடியாது என்பது போல் என்னைப் பார்த்தார்” என்று கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்