லாட்டரி அதிபர் உதவியாளர் மரணம்; விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

லாட்டரி அதிபர் உதவியாளர் மரணம்; விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை:
லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க காவல் துறைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 30ம் தேதி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடமும் தொடர் விசாரணை நடத்தினர்.

மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளரான பழனிச்சாமியிடம் வருமானவரித்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி, வெள்ளியங்காட அருகே ஒரு குட்டையில் பழனிச்சாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, வருமானவரித் துறையினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்ததாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் உள்ளதாலும், இது கொலை என கூறி, இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரி பழனிச்சாமியின் மகன் ரோஹின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் காசாளர் பழனிச்சாமி மரணம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்