ஆதாரில் ஜாதியில்லை..! திருமணமே நடக்கவில்லை..!!

ஆதாரில் ஜாதியில்லை..! திருமணமே நடக்கவில்லை..!!

குண்டூர்:

ஆதார் கார்டில் மணமகளின் பெயருக்குப்பின்னால் ஜாதி பெயர் இல்லாததால் மணமகன் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் பெடகாகனியில் உள்ள கோவில் ஒன்றி திருமணம் ஒன்று நடக்கவிருந்தது. அப்போது, திருமண தகவல்களை பதிவு செய்வதற்காக மணமக்களின் ஆதார் கார்டுகளை கோவில் புரோகிதர் கேட்டுள்ளார்.

மணமகள் கொடுத்த ஆதார் கார்ட்டில் அவரின் தந்தையின் பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் இடம்பெறவில்லை. இதனை மணமகன் வீட்டாரிடம் புரோகிதர் தெரிவித்துள்ளார். ஜாதியை ஏமாற்றி திருமணம் செய்வதாக சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

ஜாதி பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை என மணமகள் வீட்டார் தெரித்தனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத மணமகன் வீட்டார் திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, எந்தவித காரணமும் இல்லாமல் திருமணத்தை நிறுத்தியதாக மணமகள் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்