சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலதாவின் நினைவிடத்தில் அதிமுக பிரமுகர் மகனின் திருமணம் நடைபெற்றது.
தென் சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரான பவானி சங்கரின் மகன் மகன் சதீஷ் மற்றும் மணமகள் தீபிகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.