கோவை குழந்தைகள் கொலை; மனோகரனுக்கு தூக்கு உறுதி

கோவை குழந்தைகள் கொலை; மனோகரனுக்கு தூக்கு உறுதி

புதுடெல்லி:

கோவை பள்ளிக்குழந்தைகள் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கோவையில் கடந்த 2010ம் ஆண்டு சிறுமி முஸ்கான் மற்றும் அவரது தம்பி ரித்திக் ஆகியோர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமையும் செய்யப்பட்டார்.

இது சம்பந்தமான வழக்கில் தொடர்புடைய மோககிருஷ்ணன், போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான மனோகரனின் தூக்கு தண்டனையை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்