ஜெய்பூர்:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கடந்த 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.
இதனையடுத்து மீண்டும் அவரை, எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று, ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.