மணிரத்னம் மீதான தேசதுரோக வழக்கு ரத்து

  • In Cinema
  • October 9, 2019
  • 189 Views
மணிரத்னம் மீதான தேசதுரோக வழக்கு ரத்து

பீகார்:

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு பீகார் போலீசார் ரத்து செய்துள்ளனர்.

குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரகத்தில், பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் பீகார் போலீசார் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.

இதற்கு பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மணிரத்னம் மீதான தேச துரோக வழக்கை பீகார் போலீசார் ரத்து செய்துள்ளனர்.

மேலும் புகார்தாரர் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தவறிவிட்டார் எனவும், பொய் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பீகார் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்