கள்ளக்காதலி வீட்டிலிருந்து ஓடிய நிர்வாண நபர்

  • In Chennai
  • November 28, 2019
  • 207 Views
கள்ளக்காதலி வீட்டிலிருந்து ஓடிய நிர்வாண நபர்

சென்னை:

சென்னையில் கள்ளக்காதலியின் வீட்டிலிருந்து ஆடையில்லாமல் ஓடிய நபர் போலீசில் சிக்கியுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை காந்திநகர் பகுதிகளில் நள்ளிரவில் நிர்வாணமாக கையில் கத்தியுடன் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சியில் கத்தியுடன் திரியும் மர்ம நபர் என சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போலீசாரிடம், தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும், வெளியில் யாரோ வந்ததால் அப்படியே பின்பக்கமாக ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உடைகள் மற்றும் செல்போனை எடுக்க மீண்டும் அங்கு சென்றதாகவும் தெரிவிக்கவே, போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்