அய்யோ நான் ரவுடி இல்ல.. பிடிப்பட்ட அட்டக்கத்தி கபாலி

அய்யோ நான் ரவுடி இல்ல.. பிடிப்பட்ட அட்டக்கத்தி கபாலி

வேலூர்:
வேலூர், காட்பாடியில் கபாலி என்ற கபாலீஸ்வரன் வசித்து வருகிறார். இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை 2வது திருமணம் செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்ட அந்தப் பெண், அதில், கபாலீஸ்வரன் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சட்ட விரோதமாக பலருக்கு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.

மேலும், துப்பாக்கியுடன் மிரட்டும் வீடியோ ஒன்றையும் வெளியிட்ட அவர், அது பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதனை தொடர்ந்து கபாலிஸ்வரனை போலீசார் கைது செய்தனர். அப்போது விசாரித்ததில் அவர் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போலீசாரிடம் அவர் கூறியதாவது: நான் ரவுடி எல்லாம் கிடையாது என்று கபாலீஸ்வரன் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், அந்த வீடியோவில், என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் மனைவியை தமிழகம் வருமாறு கூறியிருந்தேன்.

அவர் வர மறுத்ததால் பொம்மை துப்பாக்கியை காண்பித்து மிரட்டினேன். எனது நடவடிக்கையால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

நான் ரவுடியும் இல்லை, எனக்கு எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்