சென்னை:
தமிழக மக்கள் புலிகளை போன்றவர்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் ஒய்எமசிஏ திடலில் நடைபெற்றது. இதில் பேசிய மம்தா பானர்ஜி, கருணாநிதி நினைவு விழாவில் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார்.
கருணாநிதியை யாரும் மறந்துவிட முடியாது. காரணம் அவரது செயல்பாடுகள். தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும், மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள். புலிகளை போன்றவர்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு, உரிமை உண்டு, அந்த உரிமைக்காக நாம் போராடுவோம். ஸ்டாலினின் போராட்ட குணத்திற்கு அவரது பெயரே காரணம்.
நானும் இந்தியர் தான், ஸ்டாலினும் இந்தியர் தான், அதனால் எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுத்தர முடியாது என அவர் பேசினார்.