பிரதமர் மோடி மனைவியை சந்தித்த மம்தா

பிரதமர் மோடி மனைவியை சந்தித்த மம்தா

கொல்கத்தா:
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னை கொல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்தார்.

அப்போது இருவரும் மகிழ்ச்சியோடு நலம் விசாரித்து கொண்டனர். அப்போது புடவை ஒன்றை மம்தா பானர்ஜி யசோதாவுக்கு பரிசளித்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜியும் பிரதமர் நரேந்திரமோடியும் அரசியல் அரங்கில் பரம எதிரியாக காணப்படுகின்றனர்.

மேற்கு வங்க பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்