மோடி 100 தோப்புக்கரணம் போட தயாரா? மம்தா பானர்ஜி சவால்!

மோடி 100 தோப்புக்கரணம் போட தயாரா? மம்தா பானர்ஜி சவால்!

கொல்கத்தா:
பிரதமர் மோடி, எங்கள் மீதான நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், 100 தோப்புக்கரணம் போடத் தயராக உள்ளீர்களா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், பங்குரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், நிலக்கரி சுரங்கங்களில் மாபியாக்களை முதல்வர் மம்தா ஏற்படுத்தியுள்ளார். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் சம்பளத்துக்கு சிக்கல் ஏற்படும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர் என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்து பேசிய மம்தா பானர்ஜி, திரிணாமல் வேட்பாளர் நிலக்கரி சுரங்க மாபியா என மோடி நிரூபித்தால், எனது வேட்பாளர்கள் அனைவரையும் வாபஸ் பெறுகிறேன். நீங்கள் பொய் சொன்னால் 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? என அவர் சவால் விட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்